Thursday, 14 September 2017

பாட்டாளி

https://youtu.be/V6xddoNBxCY

Saturday, 28 January 2017

How a CFL Is Made

How It's Made Nuts and bolts

How Matches Are Made

How Plastic Bottles Are Made

Disposable Glass Machine 08410085551, 08081308899

Paper Plate Machine (semi automatic ) in working condition

Agarbatti Machine Unique Industries Gota, Ahmedabad Gujarat India

Chalk piece making- Business Video(Telugu)

school chalk making machine.mpg

Stapler pin machine DEMO.MP4

BIRTHDAY BABY

Cooking Chicken In Green Coconut In My Village​ / RARE RECIPES / VILLAGE...

DONKEY FUNNY ANIMAL

16 MONTH BABY

JALLIKATTU

Friday, 27 January 2017

Madurai Air Port

*மதுரை விமானநிலையம் மூடல்*

இதை எந்த மீடியாவும் சொல்லவில்லை,
நியூஸ்7,தந்தி,சேனல்18,போன்ற சேனல்கள் வந்து பேட்டி எடுத்தபோதிலும் ஒளிபரப்பு செய்யவில்லை.

காவல்துறை மேலிடத்தில் ஒளிபரப்பக்கூடாது,
அப்படி ஒளிபரப்பு செய்தால் திருச்சி,சேலம்,கோவை,சென்னை உள்ளிட்ட மாவட்ட விமானநிலையங்கள் முற்றுகையிட வழிவகை செய்துவிடும் என்பதால் அதனை ஒளிபரப்பு செய்யவில்லை என காவல்துறை ஐஜி மற்றும் மதுரை மாவட்ட எஸ்பி எங்களிடம் நேரில் வந்து தெரிவித்தனர்.

இருப்பினும் இரவில் போலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டு எங்களது போராட்டத்தை முறியடிக்க முயற்ச்சித்தனர்.ஆயினும் பின்வாங்கவில்லை.
*தற்போது நூற்றுக்கனக்கான தோழர்கள் மட்டுமே உள்ளனர் ஆகையால் மதுரை தமுக்கம் மற்றும் பெரியாரில் உள்ளவர்கள் மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட நாளை அணிதிரன்டு வாரீர்.*

நூறு பேர் மட்டுமே இரவில் தங்கியுள்ளோம்,
100 பேர் தங்கியுள்ள போராட்டக்காரர்களை 1000 பேராக மாற்றுவதும்  பத்தாயிரம் பேராக மாற்றுவதும் உங்கள் கையில் தான் உள்ளது.

*தயவுசெய்து உங்களிடம் உள்ள அனைத்து குரூப்பிற்க்கும் இதனை அதிக அளவில் ஷேர் செய்வீர்*

இப்படிக்கு
உண்மையான தமிழன்

Thursday, 26 January 2017

You tube

பித்ருக்களுக்கு உகந்த அமாவாசையின் சிறப்பு !: https://youtu.be/fx0R0i98GtI

SANI BAHAVANA MANTHIRAM

துன்பங்கள் விலக..... சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம்   நூலில் இருந்து" நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் வாயிலகாக் கேட்டறிய விரும்புகிறேன் .என்று கேட்டார் பரமேஸ்வரன் கூ றினார் .நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் .ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் .சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது .சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றனர் சனீஸ்வரன் .சூரியபகவானுடைய மகன் .கறுத்ததேகம்உடையவன்,அவனால் உண்டாகும் துன்பத்தைவென்றஅரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்.. ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மிகவும் பிரபலமானவன் .மகா பராக்கிரமசாலியான ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன்  ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள் .அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் .அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது  என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார். ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை .எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும் ,அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான் . சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்தையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர் .. அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது .அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது .தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் .வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார்.தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் . சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,மனிதர்களில்லோ,சித்தர்,வித்யாதரர்,கந்தர்வர்களிலோ,யட்சர்கள்,ராட்சஸர்கள்,நாகர்களிலோ யாருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது .. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.. தசரதன் சனிபகவானைப் பார்த்து ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டாய வாரம் எதுவாயுனும் கேள் .உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்லா மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்றுகூறினார்...தசரதன் சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன் .அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன் என்று தசரதன் மீண்டும் கூறினார்.... சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனே ,என்னிடமிருந்து இந்த வாரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும் ..மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும் .உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன் .வேறு என்ன வாரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான்..தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து  பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்.. நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ  ஸுநவே துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்... இதன் விளக்கம் : கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன். சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.ஏ சனிபகவானே,தேவர்,அசுரர்,மனிதர்,ஆயினும், சித்தர்,வித்யாதரர்,உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான். மஹா பகவானும் ,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , "ஏ ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது .உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் . அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் . அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் .ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு  தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்.. தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.அன்றுமுதல் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு நரக வேதை அடையாமல் மொட்சலோகத்தை அடைவர்கள்.இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது...சனிபகவானே போற்றி போற்றி போற்றி .....நன்றி ..

Gastric Trouble

இடுப்பு கீல்வாயு இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் பிடிப்பு ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் - இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த "இழுப்பு" ஏற்படுகிறது. சியாடிக்கா என்றால் என்ன? நமது உடலில் இரண்டு பெரிய, நீட்டமான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் கை விரல் அளவு பெரியவை. இந்த நரம்புகள் கீழ் முதுகெலும்பிலிருந்து தொடங்கி பிட்டம், முழங்கால் இவற்றில் முடியும். முழங்காலிலிருந்து கிளைகளாக பிரிந்து கால் பாதம் வரை தொடரும். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் வலி (சியாடிகா) இந்த நரம்பு முழுவதையும் தாக்கும். உடலின் இரு பக்கங்களில் சியாடிகா நரம்பு இருந்தாலும், அசாதாரணமாக பாதிப்பு (வலி) ஒரு பக்கத்தில் தான் நிகழும். சியாடிகா வலி தானாகவே மறையும். ஆயுர்வேதத்தில் 'கிரிதரஸி' எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும். அறிகுறிகள் 'சியாடிகா' உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம். இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது. அதனால் ஏதோ சுளுக்கு என்று நாம் அலட்சியமாக இருக்க நேரிடும். ஊசிகுத்தும் வலி, சிறுநீர் போவதை "கன்ட் ரோல்" செய்ய முடியாமல் போதல், இவை இருந்தால் உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். காலை நீட்டினால் வலி, நடந்தால், மாடி ஏறினால் வலி என்றிருந்தால், ஸியாடிகாவாக இருக்கலாம். காரணங்கள் முதுகெலும்பு கோளாறுகள் இடுப்புப் பிடிப்பை தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் ஸியாடிகா ஏற்படும். இதர முதுகெலும்பு கோளாறுகளும் காரணங்கள். அதிக எடை தூக்குதல் நடப்பது, ஓடுவது, மாடிப்படிகள் ஏறுவது, இவை வலியை அதிகமாக்கும். ஆஸ்டியோ - ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்பு பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம். சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவைகளையும் காரணமாக சொல்லலாம். வீட்டு வைத்தியம் • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும். • பூண்டு 5 பல்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம். • புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம். • சூடான நல்லெண்ணை + உப்பு - மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும். • விளக்கெண்ணை ஒரு தேக்கரண்டி, தேங்காய் எண்ணை 1 தேக்கரண்டி + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 தேக்கரண்டி - இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும். • 'வெண்நொச்சி' மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 தேக்கரண்டி வீதம், எடுத்துக் கொள்ளவும்

KALA BAIRAVAR MANTHIRAM

கால பைரவர் மந்திரம்! சிவபகவானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று சனிபகவானின் குரு பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரமும் 64 வகைகள் உண்டு பைரவரின் திருவுருத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம். தலையில் மேஷஇராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முனங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன. ஸ்ரீ நவ பைரவர் மூர்த்தியின் பெயர்கள்: 1) அசிதாங்க பைரவர். 2)ருரு பைரவர்.3)சண்டை பைரவர்.4)குரோதன பைரவர்.5)உன்மத்த பைரவர்.6)கபாலபைரவர்.7)பிஷ்ண பைரவர்.8)சம்ஹார பைரவர்.9)சொர்ணாகர்ஷண பைரவர். ஆகிய பைரவ மூர்த்திகள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் மாலையில் சூரியபகவான் மறைவு நேரத்தில் பைரவர் தரிசனம் செய்து வழிபடவும். சிவந்த ஜடையும் பரிசுத்தமான உடலும் சிவந்த தேஜஸும் சூலம் கபாலம் உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும் நிர்வாணமாகவும் நாயினை வாஹனமாகவும் கொண்டு முக்கண்ணனாக ஆனந்த வடிவினனாக பூத பிரேதநாதனாக க்ஷேத்திரங்கள் க்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன். பைரவர்மூலமந்தரம் ; ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய குரு குரு வடுகாய ஹ்ரீம்|| ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம் ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம: பைரவர் காயத்ரீ; சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்|| ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்|| நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்|| பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு . அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும். தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும் ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் . 1, மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி 2, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி 3, மாசி தேய்பிறை அஷ்டமி- மகோஸ்வராஷ்டமி 4, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம் பகாஷ்டமி 5, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி 6, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி 7, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி 8, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி 9, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி 10, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி 11, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி 12, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி அஷ்டமி நாட்கள் தட்சினாமூர்த்தி வழிபாடும் சிறந்தது ----ஆன்மீகத் தகவல்கள் அசுபதி =  பேரூர் ஞானபைரவர்(கோயம்புத்தூர் அருகில்) பரணி =  பெரிச்சி கோவில் நவபாஷாணபைரவர்(காரைக்குடி அருகில்) கார்த்திகை=அண்ணாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ரோகிணி=  திருக்கண்டியூர் வடுகபைரவர்(அட்டவீரட்டானங்களில் ஒரு வீரட்டானம் இது) மிருகசீரிடம்=  க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணம் டூ மாயவரம்/மயிலாடுதுறை) திருவாதிரை=  திருவண்டார்கோவில்(பாண்டிச்சேரி) புனர்பூசம்=சாதுசுவாமிகள் மடாலயம்,விஜயபைரவர்,பழனி ரோப்கார் மையம் எதிரே. பூசம்=ஸ்ரீவாஞ்சியம் யோகபைரவர் ஆயில்யம்=காளஹஸ்தி பாதாளபைரவர் மகம்=வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலய பைரவர் பூரம்=பட்டீஸ்வர பைரவர் உத்திரம்=சேரன்மஹாதேவி அம்மநாதர்+ஆவுடையம்மன்கோவில் ஜடாமண்டலபைரவர் அஸ்தம்=திருப்பத்தூர் யோகபைரவர் சித்திரை=தர்மபுரி கோட்டை கல்யாணகாமாட்சி அம்பிகை உடனுறை அருள்நிறை மல்லிகார்ஜீன சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் சுவாதி=பொற்பனைக்கோட்டை(திருவரங்குளம்) பைரவர்,புதுக்கோட்டை அருகே விசாகம்=திருமயம் கோட்டை பைரவர் அனுஷம்=ஆடுதுறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் கேட்டை=சூரக்குடி கதாயுதபைரவர்(காரைக்குடி அருகே பள்ளத்தூர்) மூலம்=சீர்காழி சட்டநாத ஆகாசபைரவர் பூராடம்=அவிநாசி காலபைரவர் உத்திராடம்=கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பைரவர் திருவோணம்=வைரவன்பட்டி மார்த்தாண்டபைரவர் அவிட்டம்=சீர்காழி அஷ்டபைரவர் சதயம்=சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர் பூரட்டாதி=(திருச்செங்கோடு)கொக்கராயன்பேட்டை ஸ்ரீபிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பைரவர் உத்திரட்டாதி=(கும்பகோணம்)சேங்கனூர் வெண்கல ஓசை உடைய பைரவர் ரேவதி=தாத்தையங்கார்பேட்டை ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலய பஞ்சமுகபைரவர்
கட்டு மந்திரம் நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம் நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம் நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம் மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம் எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் திக்கு கட்டு 1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும் 3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன் சிவன் இருந்தவாறே உடல்கட்டு ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல் சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல் காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல் என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா (திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்) கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும் 1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும் 2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும் 3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும் 4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும் 5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும் தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம் இராகு மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் காணவேராகு திசை வருஷம் பதினெட்டு     கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்திதோணவே மாதமது முப்பத்திரண்டு     துகையான நாளதுவும் பனிரெண்டாகும்யேனவே சத்துருவால் நிவந்தனையோடும்     யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழ்போனவே பழம் பொருளும் வேதமாகும்     பிலமான நோயதுவும் கூடிக்கொல்லும் சிறப்பு மிக்க இராகு மகாதிசையானது 18 ஆண்டுகளாகும். இதில் இராகுவின் பொசிப்புக் காலம் அதாவது சுயபுத்தியானது 2 வருடம் 8 மாதம் 12 நாள்களாகும். இக்காலகட்டத்தில் சத்துருக்களால் தொல்லைகளும் நிபந்தனையோடும் எண்ணமுள்ளவனாய் மனைவி இருப்பது கண்டு மனம் வெதும்புதலும், குடியிருக்கும் மனைபாழாதலும் மூதாதையர் சேர்த்து வைத்த பழைமையான கலைப்பொருள்களும் தம் பொருளும் சேதமாகி விரயம் காட்டும். அதுமட்டுமல்லாமல் பலமான பிணியுண்டாகி உயிர்க்குக் கேடு செய்யும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் கூடியே ராகுதிசை வியாழபுத்தி     குணமுள்ள மாதமது யிருபத்தெட்டும்நாடியே நாளதுவும் மூவெட்டாகும்     நலமுள்ள ராசரால் நன்மையுடன் வாழ்வன்தேடியே தெரிவையரும் சோபனமேயாகும்     தெகுட்டாத புத்திரனும் தென்புடனேவாழ்வான்பாடியே பாக்கியமும் பவுசிகளுண்டாம்     பலன் தரும் பூமிமுதல் யோகந்தானே இவ்விராகு திசையில் வியாழ புத்திற்குரிய காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்காலத்தில் இச்சாதகனுக்கு அரசரால் நன்மையுண்டாகும். பெண்களால் சுபசோபனங்கள் ஏற்படுதலும் புத்திரோற்பத்தியும் ஏற்படும். அதனால் மனத்தில் தெம்பும் மகிழ்ச்சியும் மிகுந்து காணும். பலவிதமான பாக்கியங்கள் ஏற்படுவதோடு சமுதாயத்தில் அந்தஸ்து மிகுதலும், வெகுதனம் வாய்த்தலும் பூமி லாபமும் உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, சனி புத்திப் பலன்கள் தானென்ற ராகுதிசை சனிபுத்திகேளு     தன்மையில்லா மாதமது முப்பத்தினாலுநானென்ற நாளதும் ஆறதாகும்     நலமில்லாப் பிரமை கொண்டு நாடுநகர் திரிவன்கோனென்ற பிதுர் பீடையுண்டாகும் பாரு     கொடியிடையாள் நோவாகும்குழந்தையது சாவாம்தேனென்ற தேவதையின் இடஞ்சலுண்டாகும்     தெண்டமுடன் சத்துருவும் திரவியங்கள்சேரும். இராகு மகாதிசையில் சனிபுத்தியின் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இச்சாதகன் நன்மை இல்லாதவனாகப் பிரமை பிடித்தவனைப் போல் பலதேசமும் சென்று திரிவான். பூர்வபுண்ய வசத்தால் பிதுர்களினால் பீடை ஏற்படும். கொடிபோலும் இடை யுடைய மனைவிக்கு நோய் உண்டாதலும் குழந்தை மரணமும் உண்டாகும். குலதெய்வத்தால் இடைஞ்சல் ஏற்படும். பலவகையில் விரயங்கள் ஏற்படும். சத்துருக்களின் தொகைமிகுவதே போல வெகு தனலாபமும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் சேதமில்லா ராகுதிசை புதனார் பத்து     செப்புநாள் மாதமது முப்பதாகும்பாதமில்லா நாளதுதான் பதினெட்டாகும்     பகுத்தறிவும் அதன்பலனை பகரக்கேளுவாதமில்லா வாணிபஞ் செட்டாகும் பாரு     வகையான சகோதரமுடன் வாழலாகும்பேதமுடன் பொருளுண்டாம் பூமிலாபம்     பொங்குமால் புத்திரனில் புகழ் ரொம்பபாரே மேலும் இவ்விராகு திசையில் புதனது புத்தி 2 வருடம் 5 மாதம் 18 நாள்களாகும். அக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுவேன் கேட்பாயாக; பின்னமில்லா வகையில் வாணிபமும் செய்தொழிலும் செழிக்கும். சகோதரர்களுடன் மனமொன்றி வாழ்தலும் நேரும். பிறருடன் சிற்சில மனபோதங்கள் ஏற்படினும் தனலாபமும் பூமி லாபமும் மேலோங்கிப் பெருத்தலோடு புத்திரரால் புகழும் பெருமையும் மிகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி     பகருகின்ற மாதமது பனிரெண்டாகும்சேரேநீ நாளதுவும் பதினெட்டாகும்     செலுத்துகின்ற அதன்பலனை செப்பக்கேளுஊரே நீவிரோதமுடன் சத்துருவுண்டாம்     உடன்கேடு பண்ணிவைக்கும் உண்மைபாருதேரே நீ திரவிங்கள் யேவலுடன் சேதம்     தீதான காயங்கள் தேகத்தில் காணும் இனி, இராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: எவ்விடத்திலும் விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டினையே செய்தலும் ஏவல், பில்லி முதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில் தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன் இராகு மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் காணவே ராகுதிசை சுக்கிரபுத்தி     கணக்கான மாதமது ஆறாறாகும்கோணவே அதன்பலனைச் சொல்லக்கேளு     தோகையர்கள் தன்னாலே சுகமாகும் பாருபூணவே பூமிமுதல் பொருளுஞ்சேரும்     புகழ்பெற்ற அரசரால் சந்தோஷமாகும்ஊனவே வியாதியது பீடிப்பாகும்     உடன்கேடு வேந்தனால் கலகமாமே. இராகு திசையில் சுக்கிர பகவான் பொசிப்புக் காலம் 3 வருடங்களாகும். இக்காலத்தில் சாதகனுக்கு நிகழும் பலன்களாவன: மயில் போலும் சாயலையுடைய பெண்களால் இன்பம் விளையும். பூமி லாபம் ஏற்படுதலும் நிறைவான பொருட் சேர்க்கையும் புகழ்மிக்க அரசர்களால் சுப சந்தோஷங்களும் ஏற்படும். எனினும் வியாதி பீடிப்பதும் அதன் காரணமாகக் காரியக்கேடு ஏற்படுதலும், அரசனால் கலகம் விளையும் என்றும் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன். இராகு மகாதிசை, சூரிய புத்திப் பலன்கள் ஆகுமே ராகுதிசை சூரியபுத்தி     அருளில்லா மாதமது பத்தேயாகும்யேகுமே நாளதுவும் மூவெட்டாகும்     யென்ன சொல்வேனதன் பலனை யியம்பக்கேளுபோகுமே சத்துருவால் வியாதிகாணும்     பொருள் சிலவு பூமிமுதல் சேதமாகும்சாகுமே நாள்தோறும் சண்டையாலே     சதிரான பூமிமுதல் காலிபோமே. இவ்விராகு திசையில் சூரிய பகவானின் பொசிப்புக் காலம் கருணை தராத காலமே. இக்காலம் 10 மாதம் 24 நாள்களாகும். தீய சத்துரு ஏற்படுதலும், உடல் நலத்தைக் கெடுக்கும் வியாதி நேர்தலும் அதனால் பெரும் பொருள் செலவும் பூமி முதலிய விரயமுமாகும். ஒவ்வொரு நாளும் சண்டையிடுதலாலே சாவு நேர்தலும் பெருமை மிக்க பூமி அழிதலும் கன்று காலிகள் மாய்தலும் நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் காலியென்ற ராகுதிசை சந்திரபுத்தி     கனமில்லா மாதமது ஈரொன்பதாகும்விதமில்லா மனைவி தன்னால் பொருளுஞ்சேதம்     வாலியென்ற குரங்கது போல் மாண்டுபோவான்வகையான தேசம்விட்டு அலைவது பாரு     மாலையென்ற மனைவியால் சுகபோகமில்லைமிகையான செல்வமதும் விரையமாகும்     மக்கள் முதல் மாடுடன் கோடாங்கேளே இராகு பகவானின் திசையில் சிறப்புத்தராத சந்திர பகவானின் பொசிப்புக் காலம் 1 வருடம் 6 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: இன்னவிதம் என்று சொல்ல இயலாத வகையில் இதம் அறிந்து நடந்திடாத மனைவியால் பெரும் பொருட் சேதமும் இராமகாதையில் வரும் வாலியினைப் போல இச் சாதகன் மாண்டு போதலும் உண்டு. சுய தேசத்தைவிட்டு பரதேசத்தில் அலைந்து திரிதலும் மனைவியால் நற்சுகம் அடைதலும் இல்லாது போகும். மேலும் மக்களால் தான் அடைந்த பிற செல்வங்களாலும் கன்று காலிகளாலும் கேடே விளையும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன். இராகு மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் கேளப்பா ராகுதிசை செவ்வாய்புத்தி     கேடான நாளதுவும் வருஷம் ஒன்றுநாளப்பா நாளதுவும் பதினெட்டாகும்     நன்மையில்லா அதன்பலனை நவிலக்கேளுஆளப்பா அக்கினியும் சோரபயமுண்டாம்     அடிபணியும் தேவதையால் அவதியுண்டாம்பாளப்பா பாவையரும் பலனுந்தீதாம்     பாழாகும் பொருள் சிலவும் பலவிதமுந்தானே இனி, இவ்விராகு திசையில் செவ்வாயின் பொசிப்புக் காலம் கேடுதருவதே. அதுவும் 1 வருடம் 18 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நன்மை நேராது. அப்பலன்களாவன: அக்கினியாலும், திருடர்களாலும் வெகுபயம் உண்டாகும். குலதெய்வத்தின் சாபத்தால் மிகுந்த அவதி உண்டாகும். பாவையரால் ஏற்படும் பல தீங்குகளால் வெகுதன விரயம் ஏற்படும். பலவகையிலும் பொருட் செலவு உண்டாகும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.

10. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்…. நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நமக்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இருந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.

Farmer

சிகரெட் 🚬🚬இல்லாமல் ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட்🚬🚬 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

மதுவில்லாமல்🍺🍸🍷 ஒருவரால்
வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக
இருக்கிறார்.

மொபைல் 📱📞📲இல்லாமலும் ஒருவர்
வாழமுடியும்...
ஆனாலும், மொபைல்📲📞📱 உற்பத்தியாளர்
பணக்காரராக இருக்கிறார்.

உணவில்லாமல் எவரும்
வாழமுடியாது!...
ஆனாலும்,

🌽🍌🍍🍆உணவு🌾🍎🍏🍊🍋🍈
உற்பத்தியாளர்களான🐏🐄🐐🐓🐖🐂
விவசாயிகள்
ஏழைகளாகவே இருக்கின்றனர்...!

ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...                                       
🍏🍎🍐🍊🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🍅🍆🌶
     👏👏விவசாயிகளை மதிப்போம்👏👋🏻👏🙏🙏

Tuesday, 24 January 2017

TaMilan

ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள் !!

யானையை பிள்ளையாராய் பிடித்து
சேவலை முருகன் கொடியில் வைத்து
காளையை நந்தியாக அமர்த்தி
பசுவை கோமாதாவாக வணங்கி
சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி
புலியை ஐயப்பனின் நண்பனாக்கி
பாம்பை சிவனுக்கு மாலையாக்கி
கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி
எருமையை எமனின் தேராக்கி
குரங்கை அனுமனாக கும்பிட்டு
நாயை பைரவனாக பார்த்து

கும்பிடும் கூட்டமய்யா நாங்கள்  !!

Sunday, 22 January 2017

புதுக்கோட்டையில் பிறந்த நாங்கள்

மீண்டும் ஒரு துரோகத்தைச் செய்தது புதுக்கோட்டை..
மதுரையிலும், மதுரைக்கு தெற்கிலும் 'நான் புதுக்கோட்டையில் இருந்து வருகிறேன்' என்று சொன்னால், அந்த மக்கள் கேட்கும் முதல் கேள்வி,
"எந்த புதுக்கோட்டை ?
வீர பாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த தொண்டைமான் புதுக்கோட்டையா??" என்பதுதான்..
ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சம் தேடி புதுக்கோட்டை வந்த வீரபாண்டிய கட்டபொம்மனை, அன்றைய புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் பிடித்து, ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர்.
விளைவு கட்டபொம்மன் கயத்தாறிலே, வெட்ட வெளியிலே தூக்கிலிடப் பட்டான்.
இன்று அதே துரோகம் மீண்டும் அரங்கேறி விட்டது.
'வாடிவாசலை திறக்க மாட்டோம்' என போராடியதால், மதுரை, திண்டுக்கல், தஞ்சை, கோவை என தமிழகம் எங்கும் சல்லிக்கட்டு நடக்காத நிலையில்,
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், புதுக்கோட்டை சி.விசயபாஸ்கர் தன் சொந்த கிராமம் இராப்பூசலில், தன் உறவினர்கள், ஊர்க்காரர்களைக் கொண்டு சல்லிக் கட்டு நடத்தி முடித்து விட்டார்.
மீண்டும் தமிழர் வரலாற்றில் அழியாத துரோகத்தைச் செய்து விட்டது புதுக்கோட்டை..
இந்திய விடுதலைக்குப் பின், மன்னர் ஆட்சி ஒழிப்பு வந்தபோது,
முதன் முதலாக இந்தியாவுடன் ஓடிப் போய் இணைந்த அதே புதுக்கோட்டை,
இன்று மற்றுமொரு துரோகத்தை நிகழ்த்தி விட்டது..
சல்லிக்கட்டு மட்டுமல்ல, ஈழப் போராட்டத்திற்கும் காலம் காலமாக துணை நின்ற,
உலகிலேயே முதன் முதலாக "விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம்" அமைத்து, தமிழ் ஈழ விடுதலைக்கு வலு சேர்த்த புதுக்கோட்டை மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் இன்று உலகத் தமிழர்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கிறோம்..
'போராடிய மக்களே சல்லிக் கட்டு நடத்திக் கொள்ளட்டும்' என இருக்காமல், அந்தந்த ஊர்களில் அமைச்சர்களே முன்னின்று நடத்துவார்கள் என்று சொன்னதன் அரசியல் இப்போது புரிகிறதா??
தமிழர்கள் ஒருபுறம், மத்திய, மாநில அரசுகள் மறுபுறம் என இருந்த போராட்டம் ,
இன்று தமிழர்கள் ஒருபுறம், அதிமுக / தமிழக அரசு மறுபுறம் என நமக்குள் மோதிக் கொள்ள வழி அமைத்து விட்டது...
வெட்கப்படுகிறோம் ..!
வெட்கப்படுகிறோம் ..!
புதுக்கோட்டையில் பிறந்த நாங்கள்...!!

Saturday, 21 January 2017

Screw slotting machine

https://youtu.be/O-FBaq-F8mE

Smile while hear

https://youtu.be/9wRL0uZEN8k

PETTA MEMBER

*_முக்கிய அறிவிப்பு_*

கடந்த ஒருவாரமாக பீட்டா பீட்டா என கத்துகிறோம், கதறுகிறோம்... தடைசெய்ய வேண்டும் என கூக்குரலிடுகிறோம்...

ஆனால் பீட்டா தமிழ்நாடு கிளையின் நிர்வாகிகள் யாரென நமக்கு தெரியுமா? அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்க, ஒழிக்க வேண்டாமா? அவர்கள் வேறு யாருமில்லை...

ஈரோடு, *பள்ளிபாளையம்* *_ஷேசாயி பேப்பர் மில் மற்றும் பொன்னி சுகர்ஸ்_* உரிமையாளர் சென்னகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி நந்திதா கிருஷ்ணன் ஆகியோர்தான் பீட்டா தமிழ்நாடு நிர்வாகிகள், இவர்கள் எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காத உத்தமர்கள் போல பேசுகின்றனர், ஆனால், அவர்களது பேப்பர்மில் மற்றும் சர்க்கரை ஆலை கழிவுகளால் அந்த பகுதிகளின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை, எனவே, ஆனிவேரை அசைப்போம், சென்னகிருஷ்ணன் கும்பலை ஓட ஓட துரத்துவோம், இது உணர்வுள்ள அனைவருக்கும் சென்று சேறும்வரை பகிருவோம்...

நம் போராட்டம் சரியான திசையில் செல்லட்டும்...

*_நன்றி_*

Peta

தயவுசெய்து பகிருங்கள்..
Madurai CEOA பள்ளி குழுமத்தின் தலைவர் #Raja Climax PETA அமைப்பின் CHAIRMAN-ஆக உள்ளார்,,கடைசில நம்ம ஊர்ல பெரிய கருப்பு ஆடு ஒன்னு இருக்கு...Madurai  நண்பர்களே CEOA பள்ளியின் முகத்திரையை கிழியுங்கள்

Friday, 20 January 2017

Farmer-Jallikattu

தடைமீறி ஜல்லிக்கட்டு அனைத்து மாவட்டங்களில் இளைஞர்களும்,மக்களும் ஒன்று சேர்ந்து நடத்தட்டும்.

தமிழகத்தில் குடியரசு ஆட்சி அமல்படுத்தட்டும்.

தமிழகம் தனி நாடு ஆகட்டும்.

* தமிழகத்தின் தொழில் -
விவசாயம்

* தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே  அரசு வேலை.

* குளிர்பானம்− மோர்,இளநீர் ....

* உணவு−அரிசி,கம்பூ,சோளம்,கோதுமை...

* வீர விளையாட்டு− சல்லிக்கட்டு , கபடி.....

* தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு 10 நாள் விடுமுறை.

* பொங்கல் பண்டிகைக்கு தமிழக வீர விளையாட்டு சல்லிக்கட்டு மாவட்ட அனைத்து  நகரங்களில் 5 நாட்கள் நடைபெறும் ..முழு செலவையும் அரசு ஏற்று நடத்தட்டும்.

* விவசாயிகள் விளைவித்த பொருட்களை விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும்.

* தமிழக நீர்வழிச்சாலை திட்டம் மூலமாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க முடியும்.தண்ணீர் பஞ்சம் வராது.

* விவசாயிகளுக்கு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை.

* விவசாயிகளுக்கு இலவச கடன்.

* விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தும் விவசாயிகளுக்கு "தமிழ் விவசாயம்" விருது.

* தமிழகத்தில் இலவச கல்வி,மருத்துவம்.

* தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தகத்தில் விவசாயம் ஒரு பாடம்.
மேலும் ரிசல்ட் மார்க் கிடையாது.+2 முடித்து விட்டு கல்லூரிகளில் விவசாயம் சார்ந்த பட்ட படிப்பு படிக்கலாம்.

தமிழா முடிந்தால் பகிர்ந்து பார்.
தமிழகம் தலைநிமிர ஆதரிப்பிர் விவசாயிகளையும்,சல்லிக்கட்டையும்.

படித்து பார்த்து பகிர்ந்த என் தமிழர்களுக்கு கோடான கோடி

Jallikattu-Supreme court

பகிர்வது  பா.லெனின்பாலு..வழக்கறிஞர்

உச்ச நீதிமன்றத்திற்கு E.Mail
அனுப்புங்கள்....

ஆதார் அட்டை கட்டாயம் இல்லை.....
உச்ச நீதிமன்றம்
ஆனால்
கட்டாயம்....மத்திய அரசு

காவேரியில் தண்ணீர்  திறந்து
விட வேண்டும் ...  உச்ச நீதிமன்றம்.
ஆனால்
அது முடியாது
கர்நாடக அரசு....

ஆனால் தமிழர்கள்  மட்டும்
உச்சநீதிமன்ற  தீர்ப்பை மதித்து  போராடுகிறோம் .......

இது தான் Article. 14 கூறும்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை உச்ச  நீதிமன்றமே.... யோசிக்கும்

நம்முடைய போராட்டம் ..... நம் இன உயர்வுக்கான போராட்டம்...
இது பாரம்பரிய  உரிமை என்று உச்சநீதிமன்ற மன்றத்திற்கு  
தெரிய வாய்ப்பு  இல்லை...

1980..ம் ஆண்டிலேயே post card...மூலம் அனுப்பிய கடிதத்தை தானாக   எடுத்துக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம்....

இலட்சக்கணக்கான  E.Mail. சென்றால்  உச்சநீதிமன்றம்  கண்டிப்பாக நடவடிக்கை  எடுக்கும்   ஜல்லிகட்டு  வழக்கில்  இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை  ஆகவே நம் கருத்தை தெரிவியுங்கள்.......

மத்திய  மாநில  அரசுகளை நம்புவதைவிட
நாமே  நீதிமன்றத்தை நாடலாம்....
நீதிமன்றம்  என்பது மக்களுக்கான
மன்றமே.. தவிற  மக்களுக்கு எதிரிகள் அல்ல....

அனுப்புங்கள் நமது கருத்துக்களை மட்டும்.... E.Mail மூலம் உச்சநீதிமன்றத்திற்கு. 
E.Mail. I'D. supremecourt[at]nic.in என்ற முகவரிக்கு... 
தயவுசெய்து
இதை பகிருங்கள்.... லைக் செய்யாதீர்கள்.....
வாழ்த்துக்களுடன்
பா.லெனின்பாலு வழக்கறிஞர்

AJITH-JALLIKATTU

https://m.youtube.com/watch?v=QxWqaS_vdiA

TASMAC

பஸ் முன்னாடியோ இல்ல ரயில் முன்னாடியோ மறியல் பண்ணாதீங்க...
அது நம்ம மாணவர்களுக்கு கெட்ட பேர் தான் குடுக்கும்..

அதுக்கு பதிலா #மதுக்கடை முன்னாடி மறியல் பண்ணுங்க..
அங்க அடிச்சாதான் அரசுக்கு வலிக்கும்...

செய்வீர்களா ?????

சொன்னது சரி தான்னா ஷேர் பண்ணுங்க..

INDIAN FOODS

"#நிலக்கடலைக்கு வந்த நிலை #பாலுக்கும் வரும்".

தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா???

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது

2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்

3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்

4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது

5. ஆயில் புல்லிங்

6. காம்பிளான் குடித்தால் வளரலாம்

7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா

8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா

9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி

10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் #பன்னாட்டு நிறுவனங்களின் #விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக #ஏமாற்ற முடியுமென்றால் #உயர்நிலைப்பள்ளிகளுக்கும் #கல்லூரிகளுக்கும் சென்று நாம் #கல்வி பயல்வதால் #என்ன பயன் ????

நமது ஊரில் விளையும் #நிலக்கடலையை உண்டால் #ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில #வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின
அதன் பிறகு #நிலக்கடலை #மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது

அதனை தொடர்ந்து #பாதாம் #பிஸ்தா என வாங்கி உண்டோம்....
அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சமையம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய #சாக்லேட் #நிறுவனம் அதை #குறைந்த #விலைக்கு #அள்ளிச்சென்றது
பின்விளைவு
பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் #வெளிநாடுகளில் #நிலக்கடலைகள் #பதித்த #சாக்லேட்டுகள் அமோக #விற்பனையாக தொடங்கியது ஏனென்றால் அவர்களுக்கு #தெரியும் #நிலக்கடலை உடலுக்கு மிகவும் #உகந்ததென்று

சில வருடங்களுக்கு முன் #அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் #சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் #கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்
பின்விளைவு
பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து

உண்மையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா #மைதா தான்.

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம் ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது என்பதை அறியாமல்...

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம் இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணராமல்
இன்னும் கொஞ்ச  சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள், நாளை நம்மையும் இழந்து விடுவோம்.

மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல........

....
மருத்துவமனைகள்
அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான் ..

படித்தேன்.. பிடித்தது...... பகிர்ந்தேன்.....

Who is PEETA

இந்த அமைப்பானது 1980-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது. (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) 🐄 வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பு+னைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா. 🐄 இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம். 🐄 இவ்வாறு 2015-ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பு+னைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 35000. இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்... நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்! கொம்பைப் பிடிக்கிறாய்! கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்! அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்! என்று. நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை? 🐄 நம் தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும். 🐄 காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான். இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள். பீட்டாவின் கண்ணை உறுத்துவது இதுதான். 🐄 தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய மூன்றரை இலட்சம் கோடிகள். 🐄 எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும். 🐄 உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை. 🐄 அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலு}ன்றவே முடியாது. 🐄 அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்! உண்மையில் விலங்கினத்தை பாதுகாக்க இந்தச் சட்டம் இயற்றப்பட்டதென்றால், பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ, அடிமாடாக கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுவது ஏன்? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு ஆழ்ந்து சிந்தித்து விடை காண வேண்டிய நேரம் இது! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp