Friday, 20 January 2017

Jallikattu

சுதந்திர போராட்டத்தில்
கலந்து கொள்ளவில்லையே
என வருத்தம் இருந்தால்..

இதோ நம் சுதந்திரத்திற்கான
மற்றொரு போராட்டம் நடக்கின்றது..
குடும்பத்தோடு கலந்து கொள்ளுங்கள்..

வரலாறு நம்மை பேசட்டும்..
கல்வெட்டுகள் நம் சந்ததிக்கு
இந்த வரலாற்றை கூறட்டும்..

மெரினாவுக்கோ,
அலங்கநல்லூருக்கோ
சென்று தான் போராட வேண்டுமென்பதில்லை..
அவரவர் ஊரில் நடக்கும் போராட்டங்களில்
கலந்துகொண்டு பங்களிப்பு கொடுங்கள்..

காந்தி போராடினார், 
நேதாஜி போராடினார் என்கின்றோம்..
நம் தாத்தனோ பாட்டியோ போராடினாரா..என
தெரியவில்லை..
நம் பெயரை நம் சந்ததி சொல்லட்டும்..

வேடிக்கை பார்க்காமல் கலந்து கொள்வோம்.
போராட செல்லாவிட்டாலும்
போராடும் நண்பர்களுக்கு தேவையான
தண்ணீரை கொடுப்பதற்காக
களத்திற்கு செல்வோம்..

#மற்றொரு_சுதந்திர_போராட்டம்

No comments:

Post a Comment